×

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரி கட்ட மறுத்து, ஆங்கிலேய படைபலத்தை எதிர்த்து, உயிரைவிட தன்மானமே பெரிதென தமிழர் பண்பை பறைசாற்றியவர்கள், இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!

வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்! 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Indians ,Velunachiyar ,Veerapandiya Katbomman ,Mu. K. Stalin ,Chennai ,K. Stalin ,
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...